வருத்த படாத வாலிபர் சங்கம்
Friday, November 30, 2012
Thursday, March 8, 2012
பெண் என்னும்........!
கருவில் அரும்பி
உருவம் தரித்து
பருவம் அடையுமுன்
பலப்பல பக்குவங்கள்...
பதறாமல் பெறுபவள்...!
அரும்பும் மலராய்
அழகாய் மணம்வீசி
அன்பின் ஆழத்தை
அனைவரிடமும் காட்டி
வலம் வருகின்ற
வண்ணத் தேர்...!
எதையும் இயன்றவரை
எடுத்துச் செய்திடும்
உறுதியான உள்ளத்துடன்
உலகை வலம் வரும்
உன்னத படைப்பு...!
அகத்தில் அன்புடனும்
புறத்தில் பண்புடனும்
பெண்மைக்கு உண்மையுடனும்
பிரமிக்கும் திறமையுடனும்
பிரகாசிக்கும் சுடர்...!
பொறுமைக்கு இலக்கணமாய்
புனிதத்திற்கு பொருத்தமாய்
அடக்கம் அறிந்தவளாய்
அகங்காரம் தொலைத்தவளாய்
அன்பிற்கு பணிபவள்...!
ஆயிரம் அலுவல் செய்தும்
அலுக்காத அன்னையுள்ளம்...
அன்பாய் ஓர் வார்த்தைக்காய்
அடை காக்கும் பெண்ணுள்ளம்...!
உருவம் தரித்து
பருவம் அடையுமுன்
பலப்பல பக்குவங்கள்...
பதறாமல் பெறுபவள்...!
அரும்பும் மலராய்
அழகாய் மணம்வீசி
அன்பின் ஆழத்தை
அனைவரிடமும் காட்டி
வலம் வருகின்ற
வண்ணத் தேர்...!
எதையும் இயன்றவரை
எடுத்துச் செய்திடும்
உறுதியான உள்ளத்துடன்
உலகை வலம் வரும்
உன்னத படைப்பு...!
அகத்தில் அன்புடனும்
புறத்தில் பண்புடனும்
பெண்மைக்கு உண்மையுடனும்
பிரமிக்கும் திறமையுடனும்
பிரகாசிக்கும் சுடர்...!
பொறுமைக்கு இலக்கணமாய்
புனிதத்திற்கு பொருத்தமாய்
அடக்கம் அறிந்தவளாய்
அகங்காரம் தொலைத்தவளாய்
அன்பிற்கு பணிபவள்...!
ஆயிரம் அலுவல் செய்தும்
அலுக்காத அன்னையுள்ளம்...
அன்பாய் ஓர் வார்த்தைக்காய்
அடை காக்கும் பெண்ணுள்ளம்...!
Sunday, April 24, 2011
Wednesday, April 13, 2011
மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்
* மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் – தாய்,தந்தை
* மிக மிக நல்ல நாள் – இன்று
* மிகப் பெரிய வெகுமதி – மன்னிப்பு
* மிகவும் வேண்டியது – பணிவு
* மிகவும் வேண்டாதது – வெறுப்பு
* மிகப் பெரிய தேவை – நம்பிக்கை
* மிகக் கொடிய நோய் – பேராசை
* மிகவும் சுலபமானது – குற்றம் காணல்
* கீழ்த்தரமான விடயம் – பொறாமை
* நம்பக் கூடாதது – வதந்தி
* ஆபத்தை விளைவிப்பது – அதிக பேச்சு
* செய்யக் கூடாதது – நம்பிக்கைத் துரோகம்
* செய்யக் கூடியது – உதவி
* விலக்க வேண்டியது – சோம்பேறித்தனம்
* உயர்வுக்கு வழி – உழைப்பு
* நழுவ விடக் கூடாதது – வாய்ப்பு
* பிரியக் கூடாதது – நட்பு
* மறக்கக் கூடாதது – நன்றி
இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட
சிறப்பாக வாழலாம்
Sunday, April 10, 2011
ஜான்சன் துரை
உன்னையே நினைக்கிறன் ,
உன்னையே பார்கிறேன் ,
உன்னையே படிக்கிறேன் ,
உன்னையே எழுதுகிறேன் ,
உன்னையே பேசுகிறேன் ,
உன்னையே வாசிக்கிறேன் ,
உன்னையே நேசிக்கிறேன் ,
உன்னையே யாசிக்கிறேன் ,
உன்னை மட்டுமே சுவாசிக்கிறேன் !
இதன் பெயர்தான் காதல் என்றால் என் காதல் யாரிடத்தில் ?
என் பெயரும்தமிழ்,
என் அழகும் தமிழ்,
என் அறிவும் தமிழ்,
என் பரிவும் தமிழ் ,
என் (உரை )நடையும் தமிழ்,
என் (அணியும்)உடையும் தமிழ்,
என் விழியும் தமிழ்,
என் மொழியும் தமிழ்,
தமிழ் எனும் திருமகள் நான்
நானே உன் மணமகன்.......................
பயப்படாதிங்க சும்மா கவிதை தான் சரியா ?
Saturday, September 11, 2010
Subscribe to:
Posts (Atom)